28 மார்ச், 2010

கல்வி

மண்போட்டு விரலெரிய
அனா எழுதியபோது
எனது குஞ்சுப் பருவம்
சுருங்கிப் போனது

பிரம்புகள் கொண்ட
பிரமாக்களைக் கண்டபோது
கொஞ்சமிருந்த நம்பிக்கைகளும்
சூறையாடப் படலாயிற்று

அடியாத மாடு
படியாது என்பதில்
பள்ளி ஆசைகள்
தொலைந்து போயிற்று

மிஞ்சியிருந்த மூர்க்கம்
எல்லாம் வன்முறையிடம்
வசப்படலாயிற்று

கல்லுரிவிட்டு வெளியேறும்
போது நான் கவிதை பாடவில்லை
கத்திபற்றி ஆழமாகச்
சிந்திக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக