மண்போட்டு விரலெரிய
அனா எழுதியபோது
எனது குஞ்சுப் பருவம்
சுருங்கிப் போனது
பிரம்புகள் கொண்ட
பிரமாக்களைக் கண்டபோது
கொஞ்சமிருந்த நம்பிக்கைகளும்
சூறையாடப் படலாயிற்று
அடியாத மாடு
படியாது என்பதில்
பள்ளி ஆசைகள்
தொலைந்து போயிற்று
மிஞ்சியிருந்த மூர்க்கம்
எல்லாம் வன்முறையிடம்
வசப்படலாயிற்று
கல்லுரிவிட்டு வெளியேறும்
போது நான் கவிதை பாடவில்லை
கத்திபற்றி ஆழமாகச்
சிந்திக்கிறேன்...
28 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக