28 மார்ச், 2010

அரசியல்வாதிகள்

நிமிர்ந்து நிற்கும் கற்பகதருவே
நீயெமக்கு ஒரு சாட்சி
மகிழ்ந்து வாழ்ந்த எம்மினம்
மலடாய்ப் போனது பார்த்திரோ?

செளித்து நிற்கும் ஆலே
செவிடாய்ப் பாவனை செய்யாதே
விழுதாய் பரவிய உன்கையை
வெட்டி எடுத்தவர் யாரன்றோ?

அழிந்து போன குடில்களே
யாரை நோவோம் முடிவிலே
கடந்து போன காலத்தை
கண்ணீர் கொண்டு அழிப்போமா?

வீரம் பேசி நடித்தார்கள்
வென்று தருவதாய்த் துடித்தார்கள்
சோரம் போன எம்மினத்தில்
சுகத்தை மட்டும் சுகித்தாரோ?

நெற்றிக் கண்ணிருந்தால் திறக்கட்டும்
அவரெம்நெஞ்சை வெண்டுமென்றால் அறுக்கட்டும்
கொஞ்சிப் போகும் அணிலினமே
கூறிச்செல்லும் அவர் துரோகத்தை?

பேசித் தீர்க்கும் பிரச்சனையை
பிணக் குவியல் ஆக்கினரே
ஆபிரிக்காவின் ஒரு மண்டேலா
ஆகுவாரா இவர் எல்லாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக