மனிதனில் கடவுள் காணும்
மடமை கொண்ட மானிடா
கடவுளே மனிதனின் ஒரு
கைங்கரியம் இங்கு தானேடா
மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைமயக்கும்
மயக்கத்தில் உன்சித்தம் தனைப்பறிக்கும்
மதியின் கண்கட்டி அதுவுன்
வாழ்நாளை நித்தமும் குடிக்குமடா
சாமிகளான ஆசாமிகளை நம்பி
சீதைகளும் நவீன திரெளபதியாகிறாரடா
வித்தையில்கொட்டும் வெள்ளி நாணயத்தில்
வெறிகொண்டலையும் காவி உடையாரடா
மனங்களை விற்றவர்கள் எங்கு
காவியுடையில் இருந்தால் என்னடா
கடவுளாக வந்தால் என்னடா
வரங்களாக வக்கிரங்களையே தருவாரடா
உனக்கும் எனக்கும் அவர்க்கும்
உண்மையான கடவுள் யாராடா
உன்னிடமும் என்னிடமும் அவரிடமும்
உள்ள மனச்சாட்சி தானடா
28 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக