28 மார்ச், 2010

மனச்சாட்சி

மனிதனில் கடவுள் காணும்
மடமை கொண்ட மானிடா
கடவுளே மனிதனின் ஒரு
கைங்கரியம் இங்கு தானேடா

மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைமயக்கும்
மயக்கத்தில் உன்சித்தம் தனைப்பறிக்கும்
மதியின் கண்கட்டி அதுவுன்
வாழ்நாளை நித்தமும் குடிக்குமடா

சாமிகளான ஆசாமிகளை நம்பி
சீதைகளும் நவீன திரெளபதியாகிறாரடா
வித்தையில்கொட்டும் வெள்ளி நாணயத்தில்
வெறிகொண்டலையும் காவி உடையாரடா

மனங்களை விற்றவர்கள் எங்கு
காவியுடையில் இருந்தால் என்னடா
கடவுளாக வந்தால் என்னடா
வரங்களாக வக்கிரங்களையே தருவாரடா

உனக்கும் எனக்கும் அவர்க்கும்
உண்மையான கடவுள் யாராடா
உன்னிடமும் என்னிடமும் அவரிடமும்
உள்ள மனச்சாட்சி தானடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக