28 மார்ச், 2010

கட்டுப்பணம்

மில்லியன்களைக் கொடுத்து
மாளிகையான வீடுவேண்டிய போது
வாழ்வின் இன்பமா நேரங்களை
வழித்தெடுத்து கடன் கொடுப்பது
புரியவில்லை

காலை எழுந்தவுடன்
நினைவில் வரும் வேலை
இரவு தூங்கும்போதும்
நினைவைவிட்டு அகல மறுத்து
கனவுகளாக விரிய
அவஸ்தை உடன்
நடுவிரவில் விழித்ததிருந்து
வீங்கிப் போன கண்கள்

இருந்து உண்பதற்கு
நேரமின்றி வழியில் வேண்டி
நடையில் கடிக்கும்
அவசரம்

பிள்ளைகள் விழித்திருக்க
கண்டு சிலமாதங்களாக
சொற்பனத்தில் வரும்
அப்பாவான உணர்வு
மனதை அழுத்தம் தர
பதிவுசெய்யப்பட்டு காட்சிகளில்
நவீன நிலவைக்காட்டும்
புதிய அம்மாக்கள்

வாழ்க்கை என்பதை
நித்தம் தொலைத்துக் கொண்டு
வாழ்வைத் தேடுவதாக
மண்குதிரையில் சவாரி செய்யும்
நடப்பது புரியாத
நடைப்பிணங்களாக

இன்றைய கனவுலகில்
எதுவும் இன்றி
சஞ்சாரிப்பவர்களை
நாளைய தனிமை
வரவேற்க காத்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக