28 மார்ச், 2010

மனிதமிருகம்

மிருகமான மனது
அதை மறைக்க
மனிதன் என்னும் போர்வை
மிருகத்தோடு வாழும்
மனிதனா
மனிதனோடு வாழும்
மிருகமா
என்றும் ஓயாத
ஒரு கேள்வி
என்னை நித்தம்
உதைத்து தள்ளும்

நித்தம் கலைக்கும்
மிருகம்
செத்துப் பிழைக்கும்
மனிதம்
மிருகங்கள் வெல்லும்
மனிதம் தின்று
அது நன்றாய்
கொழுக்கும்
மனிதங்கள் மாளும்
பிண்டங்கள் போனபின்
எலும்புகளாய் அது
நிறைந்து கிடக்கும்

என்றாலும் மனிதம்
நின்றேதான் போராடும்
அது வென்றாலே
வாழும்
மிருகத்தில் மனிதம்.
அன்றேல்
மதம் கொண்டாடும்
மிருகம் மனிதவேட்டையில்
வேகம் காட்டும்.

மனிதன் என்கின்ற
மிருகம்
மிருகமாகவே வாழ
மனிதம் மரிப்பது
தொடர்கதையாகும்.

மிருகமான மனிதன்
இயற்கைக்கே சவாலாக
கூர்ப்பிற்கு புது
இலக்கணமாக
இரண்டுகாலில் எங்கும்
சவாரி செய்ய

மிருகம் கொன்று
மனிதம் வெல்ல
மனித மிருகம்
புதிய டார்வினை
கலங்களின்
எல்லைக்கோடுகள்
தாண்டி
இனியாவது
தேடுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக