28 மார்ச், 2010

ரோஜாவிடம் ஒரு கேள்வி?

ரோஜாவிடம் ஒரு கேள்வி?

ரோஜாக்களாக மலர்ந்துவிட்டு
வண்டுக்காக தவமிருக்கும்
அவமானத்தில்
கூனிக்குறுகிப்போன
மலர்களே...

வண்டுகள் தங்களையே
விற்று தங்கம் சேர்ப்பது
கண்டபின்னும் உங்களுக்கு
ஏன் இந்தச் சோகம்?

மானம் போகுதே எனத்
துடிக்கும் ரோஜாவே...
அடிமை வண்டுடன் ஆன
உறவில் அவமானமில்லையா?

நாடுவிட்டு நாடு சென்றபின்பும்
நகைகேட்டு அலையும்
வண்டை எண்ணி
வாடும் ரோஜாக்களே
உங்கள் வாட்டத்தில்
நிஜாயம் உண்டோ?

மானம் கெட்ட அவர்களுக்காய்
நீயேன் வேளை கெட்டுக்
காத்திருக்கிறாய்?

பண்டமாற்று செய்ய
நினைப்பவரிடம்
உன் உணர்வையும்
மென்மையையும்
எதற்காக அடகுவைக்கிறாய்?

உன்னிடமே கூலிவேண்டி
உன்விளைச்சலையே
சொந்தம் கொண்டாடும்
சுயநல வண்டுகளிடம்
உனக்கேன் இன்னும்
இந்த ஊடல்?

தேடலற்று ஊடலையே
நாடும் வண்டை விட
புயலை நாடிப் போ ரோஜாவே
உன் வாசமாவது
இழுத்துச் செல்லப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக