28 மார்ச், 2010

கனவு கண்டேன்

வெள்ளைக் காகம்
பறக்கக் கண்டேன்
வெண்பனி கொட்டும்
ஈழம் கண்டேன்

தண்ணொளி வீசும்
சூரியன் கண்டேன்
தணலாய்க் கொதிக்கும்
சந்திரன் கண்டேன்

அல்லி மலரப்
பகலில் கண்டேன்
ஆதவ கிரகணம்
இரவில் கண்டேன்

நாகம் ஒன்றின்
நட்பைக் கண்டேன்
நல்ல பசுவின்
வெறியைக் கண்டேன்

புல்லுத் தின்னும்
புலியைக் கண்டேன்
புலால் உண்ணும்
இடபம் கண்டேன்

இராமனும் சீதையும்
விலகக் கண்டேன்
இராவணனைத் தேடியவள்
போகக் கண்டேன்

நிகழ முடியாதவை
நிரையாகக் கண்டேன்
நிகழ்ந்தவை யெல்லாம்
கனவாகக் கண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக