வெள்ளைக் காகம்
பறக்கக் கண்டேன்
வெண்பனி கொட்டும்
ஈழம் கண்டேன்
தண்ணொளி வீசும்
சூரியன் கண்டேன்
தணலாய்க் கொதிக்கும்
சந்திரன் கண்டேன்
அல்லி மலரப்
பகலில் கண்டேன்
ஆதவ கிரகணம்
இரவில் கண்டேன்
நாகம் ஒன்றின்
நட்பைக் கண்டேன்
நல்ல பசுவின்
வெறியைக் கண்டேன்
புல்லுத் தின்னும்
புலியைக் கண்டேன்
புலால் உண்ணும்
இடபம் கண்டேன்
இராமனும் சீதையும்
விலகக் கண்டேன்
இராவணனைத் தேடியவள்
போகக் கண்டேன்
நிகழ முடியாதவை
நிரையாகக் கண்டேன்
நிகழ்ந்தவை யெல்லாம்
கனவாகக் கண்டேன்
28 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக