28 மார்ச், 2010

அவள்

அவளொரு தாரகை
அழகிய காரிகை
மருவியே வந்தவள்
மர்மங்கள் காட்டினாள்

நூலான இடை
வேலான விழி
தாளாத பார்வை
சளைக்காத நளினம்

மென்பட்டு நீக்கினாள்
மெய்யழகு காட்டினாள்
மூவழகும் கண்டு
மோகத்தில் மெளனித்தேன்

இலக்கணம் இடையா
இலக்கியம் விழியா
முத்தமிழ் உடலா
மொத்தமே தமிழா

அத்தனை அழகு
அவளின் அசைவில்
தித்திக்கும் கவிதையாய்
துள்ளும் நடையழகு

சொற்களின் கோர்வையில்
சொற்கங்கள் காட்டினாள்
பாண்டியர் சபையாள்
பழமைமொழி யாவாளாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக