அவளொரு தாரகை
அழகிய காரிகை
மருவியே வந்தவள்
மர்மங்கள் காட்டினாள்
நூலான இடை
வேலான விழி
தாளாத பார்வை
சளைக்காத நளினம்
மென்பட்டு நீக்கினாள்
மெய்யழகு காட்டினாள்
மூவழகும் கண்டு
மோகத்தில் மெளனித்தேன்
இலக்கணம் இடையா
இலக்கியம் விழியா
முத்தமிழ் உடலா
மொத்தமே தமிழா
அத்தனை அழகு
அவளின் அசைவில்
தித்திக்கும் கவிதையாய்
துள்ளும் நடையழகு
சொற்களின் கோர்வையில்
சொற்கங்கள் காட்டினாள்
பாண்டியர் சபையாள்
பழமைமொழி யாவாளாள்
28 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக