31 மார்ச், 2010

அந்திமம்

தொப்பிள் கொடிகள்
அறுந்தபோது துளிர்த்த
அந்தக்கனவுகள்
இன்று கருகிப் போன
வடுக்களாக துறுத்தும்
வேதனை...

தவண்ட குழந்தைகளுடன்
வளர்ந்த ஆசைகள்
தடம்மாறிய வாழ்வில்
என்றோ எங்கோ
தவறிப் போய்விட்ட
பரிதவிப்பு...

ஊட்டிய போதெல்லாம்
அந்திமகாலத்தில்
அரவணைப்பார்கள்
என்கின்ற நம்பிக்கையில்
குதுகலித்தவளின் கனவில்
சற்பங்கள் குடிவந்த
அவதி...

ஓடிவிளையாடி போது
துசுபட்டதிற்காய்
துடித்தவளை
இன்று தூசுகள்கூட
மதிப்பதில்லை அது
அங்குமிங்கும் அதிகாரத்தோடு
அவள்மீது சவாரிசெய்யும்...

கிழக்கில் உதிக்கின்ற
சூரியனுக்கும் பரிகாசம்
வெழுக்கும் முதுமையுடன்
பிறக்கும் குழந்தைகளே
உங்கள் கால்களும்
விரைவில் தள்ளாடும்
என்பதாக...

கூனிவிட்ட உடலும்
குறைந்துவிட்ட பார்வையும்
தளர்ந்து விட்டநடையும்
பார்த்து
கிழங்கள் என்பதாய்ச்
காலம் சிரித்தாலும்
விறைத்த அவள்நம்பிக்கை
நெடுந்தூரம் நோக்கும் அவளின்
கூசுகின்ற விழிகள்
இன்னும் நம்பிக்கையோடு நோக்க...

ஏக்கத்தின் காத்திருப்பு
எப்போது முடியும்
என்னும்
ஏக்கத்தோடு
காத்திருக்கும்
காலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக