31 மார்ச், 2010

இன்னும் கூக்குரல்...

பந்தையக் குதிரையில் பணம் கட்டடிய
வெளிநாட்டுத் தமிழர்கள்...

தோற்றுப் போன குதிரைகளை
சபிக்க முடியாதவர்களாய்

நேற்றைய கனவில்
என்றும் மிதக்கும்
யாதர்த்த விரோதிகளாக

என்றும் பறிக்கும்
அண்டங்காக்காய்களின்
பிடுங்கல் தொடர

எந்த இலக்குமில்லாது
இன்னும் கூக்குரல்....

1 கருத்து:

  1. ”நேற்றைய கனவில்
    என்றும் மிதக்கும்
    யாதர்த்த விரோதிகளாக”

    இந்த வரிகள் மிகவும் ஆழமானவை.ஆனால் கீழே இருப்பவை சாட்டையடி

    என்றும் பறிக்கும்
    அண்டங்காக்காய்களின்
    பிடுங்கல் தொடர

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு