28 மார்ச், 2010

செந்தமிழ் கன்னியே

செந்தமிழ் கன்னியே
சிந்தையில் நிறைந்தவளே
உன்னழகு என்னையே
கொல்லுமது நித்தமே

இலக்கணம் முன்னழகா
இலக்கியம் பின்னழகா
இயலென்ன இடையழகா
இசையென்ன சொல்லழகா

நாடகம் நடையழகா
நாம்போற்றும் வடிவழகா
தேமதுரத் தமிழழகே
திசையெங்கும் நீயழகே

வான்போற்றும் மன்னரெல்லாம்
வணங்கிட்ட உன்னழகு
வாழ்ந்தவிதம் என்னதன்றோ
வாழும்விதம் ஏதன்றோ

வாய்வீரம் பேசியே
வீழ்ந்ததடி எம்மினம்
வாழ்வதாக நினைத்துன்தன்
வைத்திருப்பும் இல்லாதாகுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக