7 டிசம்பர், 2010

பிழை யென்பதோ சரியென்பதோ

வார்த்தைகள் வற்றி என் வாய்
மூடியிருக்க வில்லை
கொட்டப்போகும் சொற்களுக்கு
வரைபிலக்கணம் தேடுவதில்
கொஞ்சம் மறந்து போய்விட்டேன்.

சொற்களால் கருவுறும் உன் ஓவியத்தை
ஆயிரம் கோணத்தில் அவரவர் நோக்குவார்.
உன்கோணங்கள் அழிந்து
அவர் கோணல்களில்
நீ குற்றவாளியாவாய்...

மௌனங்கள் என்னும் வெற்றுத்தாளில்
ஓவியங்கள் இல்லை
கோணல்கள் இல்லை
விமர்சனமும் இல்லை

நிறங்கொண்ட ஓவியங்கள்
பிறக்கும் போது
பல மனங்கொண்ட
மனிதர்களை அதை நோக்க
அவர் குணங்கொண்ட வடிவில்
கோணங்கள் உருவாகி
உனைவந்து சேரும்
குறை சொல்லும்
நிறை சொல்லும்

இனம் கண்டுகொள்
பிழை யென்பதோ
சரியென்பதோ
நிலையற்ற ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக