நான் இழுத்துக் கொண்டு போக முதல்
இயக்கத்துக்குப் போனவன்.
மீசையரும்பிய காலத்தில் என்
கோர்மோன்கள் அறிவை மறைத்திருக்க வேண்டும்.
இயக்கத்துக்கு போனபின்புதான்
உலகைப் புரிந்து கொண்டேன்.
மாபியாக்களுக்கும் தியாகிகளுக்கும் என்ன தொடர்பு
என்னும் விளக்கம் எனக்கு அங்கே தரப்பட்டது.
தராதரப் படுத்தலுக்கும் தறுதலையளுக்கும் எப்படி
முடிச்சுப் போடலாம் எனக் காட்டிக் கொடுக்கப்பட்டது.
கொலைகள்தான் எங்கள் ஞானஸ்தானம்.
எதிர்த்தது வாய் திறந்தவர்கள் என்றும் எங்கள் விரோதிகள்.
இரண்டு வருடத்தில் இது போதும் என்று வந்து விட்டோம்.
இத்தனை வருடமாகியும் அன்னியதேசத்தில் நின்று
கனவுகளோடே கைதட்டும்கூட்டம் ஓய்வதாக இல்லை.
ஈழத்தில் சிறுவர்களை ஈணும்தாய்மார்களே
பருந்துகளைப் பார்த்து
நீங்களும் கனவு காண்பீர்களா?
6 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக