7 டிசம்பர், 2010

மௌனம்

சொற்கள் கொட்டிவிடும் என்று மௌனமா
சொற்களே இல்லை என்பதால் மெளனமா
மற்றவர்களைப் படிப்பதற்காய் மெளனமா
மற்றவர்களைப் படித்ததால் மெளனமா
பேசுவதைக் கேட்பதற்காய் மௌனமா
பேசவே கூடாதென்பதற்காய் மௌனமா
சாந்தி பெறுவதற்கான மௌனமா
சாந்தி பெற்றதால் மௌனமா
புலன்களை அடக்கும் மௌனமா
புலன்கள் அடங்கியதால் மௌனமா
வாழவே புரிந்ததால் மௌனமா
வாழவே புரியவேண்டுமென்கின்ற மௌனமா
கற்றதால் வந்த மௌனமா
கற்கவேண்டும் என்பதால் மௌனமா
மனச்சாட்சியில் பிறக்கும் மௌனமா
மனச்சாட்சியே நீ மௌனமா
மௌனமே நீ கனகமா
உன்னணைப்பில் உரிமையும் தொலையுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக