கண்ணும் கண்ணும் கலக்கும்
காதலாய் அது சுரக்கும்
பெண்ணைப் போகமாய் எண்ணிய
பேதமை தொலைந்து போகும்
எண்ணும் போதெல்லாம் இனிக்கும்
என்னவள் நினைவே நிறையும்
சொல்லில் செந்தமிழ் நடனம்
சொற்கியே நானும் இரசிப்பேன்
கண்களில் வீசும் ஓளியும்
தேனிதழ் சிந்தும் சுவையும்
எந்தனை மயக்கும் கள்ளோ
இவளென் பேரின்ப மாதோ
காதலே உயிரின் உயிரோ
காணாதார் வெறும் ஐடமோ
உயிரே உருகும் அவளால்
உலகம் மறக்கும் நிதமும்
வாழ்விலே சிலருக்கே வரும்தவம்
வாய்த்தால் உலகின்பம் நிறைவுறும்
ஏறினோம் இறங்கினோம் என்றவாழ்கை
ஏனிந்த அவலம் என்றகணங்கள்
வீணர்கள் பேச்செல்லோ காதலென்று
வினாவியகாலங்கள் நினைவில் உண்டு
நானதன் வயப்படல் ஆனபோது
என்னை நான்மறுக்கும் என்னைக்கண்டேன்
தோழனே சொல்லடா காதலென்ன
தோன்றிவிடும் மாய வித்தையென்ன
டார்வினின் கோள்பாடு பின்புலத்தில்
ஞானத்தையே உண்டுபண்ணும் செயற்பாடா?
தேடுகின்றேன் விடையொன்று இதற்கின்று
தெரிவதெல்லாம் அவள்முகமே எங்கெங்கும்.
7 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
your articles are Great!
பதிலளிநீக்கு