7 டிசம்பர், 2010

மனிதனின் மறுபக்கம்

ஊனும் எலும்பும் உள்ளிருக்கும் நரம்பும்
நாறிப் போய்விடும் நாம்மூச்சு நிண்டிடவே
ஆணவத்தில் ஆடுவார் அதர்மத்தோடு வதைப்பார்
வாழையடி வாழையாய் வாழ்ந்திருக்கும் கனவுடன்

யாதுமே பொய்யென நாழியில் மாறிடும்
மெய்யினை உணர்ந்தவன் ஞானியாய் பிரசவிக்க
அறிவிலி ஆடுவான் அடங்காது திமிறுவான்
முடிவிலே யாதுமே பூச்சியம் ஆகுவான்

மனிதரை வதைக்கின்ற மனிதனும் மனிதனா
புனிதங்கள் செய்தாலும் மனிதத்தின் முகவரா
மனதிலே விலங்காக நோய்களில் அழுந்துவர்
மனிதனை வதைப்பதில் மகிழ்வினைக் கொள்ளுவார்

அழகு பொயுரைத்து கருத்தினை மாற்றுவர்
ஆயினும் குரூரங்கள் மரித்தாலும் பேசுமே
மகான்களைப் படிக்கிறார் மனிதத்தை இழக்கிறார்
மனிதனின் மறுபக்கம் விலங்கென காட்டுறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக