எத்தனையோ இசங்கள் ஐயா உலகிலே
அத்தனையும் சவங்கள் ஐயா நடப்பிலே
சித்திரமாய் வசனங்கள் அங்கே சிலேகிக்கும்
சீள்வடியும் தனிமனித அராஐகமே ஒழிந்திருக்கும்
இத்தனையும் பல முகங்கள் கொண்டிருக்கும்
எத்தனையோ குறுக்கெழுத்தாய் திரிந்து வரும்
நடமுறையில் வென்ற இசம் ஏதுமுண்டோ
நானதற்குத் தாழ்பணிய சித்தம் கொண்டேன்.
7 டிசம்பர், 2010
பிழை யென்பதோ சரியென்பதோ
வார்த்தைகள் வற்றி என் வாய்
மூடியிருக்க வில்லை
கொட்டப்போகும் சொற்களுக்கு
வரைபிலக்கணம் தேடுவதில்
கொஞ்சம் மறந்து போய்விட்டேன்.
சொற்களால் கருவுறும் உன் ஓவியத்தை
ஆயிரம் கோணத்தில் அவரவர் நோக்குவார்.
உன்கோணங்கள் அழிந்து
அவர் கோணல்களில்
நீ குற்றவாளியாவாய்...
மௌனங்கள் என்னும் வெற்றுத்தாளில்
ஓவியங்கள் இல்லை
கோணல்கள் இல்லை
விமர்சனமும் இல்லை
நிறங்கொண்ட ஓவியங்கள்
பிறக்கும் போது
பல மனங்கொண்ட
மனிதர்களை அதை நோக்க
அவர் குணங்கொண்ட வடிவில்
கோணங்கள் உருவாகி
உனைவந்து சேரும்
குறை சொல்லும்
நிறை சொல்லும்
இனம் கண்டுகொள்
பிழை யென்பதோ
சரியென்பதோ
நிலையற்ற ஒன்று.
மூடியிருக்க வில்லை
கொட்டப்போகும் சொற்களுக்கு
வரைபிலக்கணம் தேடுவதில்
கொஞ்சம் மறந்து போய்விட்டேன்.
சொற்களால் கருவுறும் உன் ஓவியத்தை
ஆயிரம் கோணத்தில் அவரவர் நோக்குவார்.
உன்கோணங்கள் அழிந்து
அவர் கோணல்களில்
நீ குற்றவாளியாவாய்...
மௌனங்கள் என்னும் வெற்றுத்தாளில்
ஓவியங்கள் இல்லை
கோணல்கள் இல்லை
விமர்சனமும் இல்லை
நிறங்கொண்ட ஓவியங்கள்
பிறக்கும் போது
பல மனங்கொண்ட
மனிதர்களை அதை நோக்க
அவர் குணங்கொண்ட வடிவில்
கோணங்கள் உருவாகி
உனைவந்து சேரும்
குறை சொல்லும்
நிறை சொல்லும்
இனம் கண்டுகொள்
பிழை யென்பதோ
சரியென்பதோ
நிலையற்ற ஒன்று.
6 நவம்பர், 2010
கனவு காண்பீர்களா?
நான் இழுத்துக் கொண்டு போக முதல்
இயக்கத்துக்குப் போனவன்.
மீசையரும்பிய காலத்தில் என்
கோர்மோன்கள் அறிவை மறைத்திருக்க வேண்டும்.
இயக்கத்துக்கு போனபின்புதான்
உலகைப் புரிந்து கொண்டேன்.
மாபியாக்களுக்கும் தியாகிகளுக்கும் என்ன தொடர்பு
என்னும் விளக்கம் எனக்கு அங்கே தரப்பட்டது.
தராதரப் படுத்தலுக்கும் தறுதலையளுக்கும் எப்படி
முடிச்சுப் போடலாம் எனக் காட்டிக் கொடுக்கப்பட்டது.
கொலைகள்தான் எங்கள் ஞானஸ்தானம்.
எதிர்த்தது வாய் திறந்தவர்கள் என்றும் எங்கள் விரோதிகள்.
இரண்டு வருடத்தில் இது போதும் என்று வந்து விட்டோம்.
இத்தனை வருடமாகியும் அன்னியதேசத்தில் நின்று
கனவுகளோடே கைதட்டும்கூட்டம் ஓய்வதாக இல்லை.
ஈழத்தில் சிறுவர்களை ஈணும்தாய்மார்களே
பருந்துகளைப் பார்த்து
நீங்களும் கனவு காண்பீர்களா?
இயக்கத்துக்குப் போனவன்.
மீசையரும்பிய காலத்தில் என்
கோர்மோன்கள் அறிவை மறைத்திருக்க வேண்டும்.
இயக்கத்துக்கு போனபின்புதான்
உலகைப் புரிந்து கொண்டேன்.
மாபியாக்களுக்கும் தியாகிகளுக்கும் என்ன தொடர்பு
என்னும் விளக்கம் எனக்கு அங்கே தரப்பட்டது.
தராதரப் படுத்தலுக்கும் தறுதலையளுக்கும் எப்படி
முடிச்சுப் போடலாம் எனக் காட்டிக் கொடுக்கப்பட்டது.
கொலைகள்தான் எங்கள் ஞானஸ்தானம்.
எதிர்த்தது வாய் திறந்தவர்கள் என்றும் எங்கள் விரோதிகள்.
இரண்டு வருடத்தில் இது போதும் என்று வந்து விட்டோம்.
இத்தனை வருடமாகியும் அன்னியதேசத்தில் நின்று
கனவுகளோடே கைதட்டும்கூட்டம் ஓய்வதாக இல்லை.
ஈழத்தில் சிறுவர்களை ஈணும்தாய்மார்களே
பருந்துகளைப் பார்த்து
நீங்களும் கனவு காண்பீர்களா?
23 மே, 2010
அசுரப் போராட்டம்
ஆயிரம் மெழுகுவர்த்திகள்
மெளனமாகக் கரைந்தன
ஆயிரமாயிரம் உயிர்களைப்
பாசிசம் குடித்தது
ஒரு அசுரனைக்கண்டு
நாம் தெய்வத்திடம் ஓடாது
மறு அரசனை அழைத்துவந்து
மரணம் படைத்தோம்
சிறு தெய்வங்களை
அசுரன் கொன்றபோது
நாம் சிலாகித்து நின்றோம்
எதிர்த்தவரை
சுடலைச் சாம்பலில்
புரளுபவனின் சுற்றத்தார்
பித்தர்கள் என்றோம்
சுற்றம் விட்டு
நவீன சுடலை நோக்கி
ஓடுங்கள் எனக்
கட்டளை இட்டோம்
மிஞ்சியவரை எரித்து
சாம்பலாக்கி வந்து
புரளுங்கள் என்றோம்
எங்கள் கண்கள்
நியாய அநியாயத்தை
புறம்தள்ளி இலட்சியத்தை
மட்டுமே பார்த்ததென்றோம்
மண்ணை மீட்கப்
பதறிய நாங்கள்
மனங்களை மாத்திரம்
தொலைத்து வந்தோம்
அசுரனிடம் நியாயம்
கேட்டவரை எண்ணி
கடவுளும் நிரந்தரமாக
கண்மூடி இருந்தார்
பணத்திற்காக கோசம்
போட்டவர்களை இனத்திற்கான
தேச பிதாக்களாக
உருவகித்தோம்
பேசிய குரல்வளைகளை
அறுத்து எறிந்தோம்
மாற்றுக் கருத்தை
துரோகிகளாக்கி னோம்
பேசியது துரோகம்
இல்லை பேச்சை
நிறுத்தி வைத்தது
துரோகம் என்பது
புரியாது இருந்தோம்
மனிதர்களை ஓமகுண்டத்தில்
தள்ளிய அசுரர்களின் போராட்டம்
முடிந்தபோது கோவணமும்
இல்லாத எம்மினத்தின்
கண்ணீரில் வியாபாரம்
நடத்தும் நாடுகடந்த
தமிழர்கள் ஆகினோம்
நீங்கள் கண்ணீர்விடுவதாக
வியாபாரம் செய்கிறீர்கள்
எங்கள் கண்களில்
எப்போதும் இரத்தம்தான்
வருகிறது.
மெளனமாகக் கரைந்தன
ஆயிரமாயிரம் உயிர்களைப்
பாசிசம் குடித்தது
ஒரு அசுரனைக்கண்டு
நாம் தெய்வத்திடம் ஓடாது
மறு அரசனை அழைத்துவந்து
மரணம் படைத்தோம்
சிறு தெய்வங்களை
அசுரன் கொன்றபோது
நாம் சிலாகித்து நின்றோம்
எதிர்த்தவரை
சுடலைச் சாம்பலில்
புரளுபவனின் சுற்றத்தார்
பித்தர்கள் என்றோம்
சுற்றம் விட்டு
நவீன சுடலை நோக்கி
ஓடுங்கள் எனக்
கட்டளை இட்டோம்
மிஞ்சியவரை எரித்து
சாம்பலாக்கி வந்து
புரளுங்கள் என்றோம்
எங்கள் கண்கள்
நியாய அநியாயத்தை
புறம்தள்ளி இலட்சியத்தை
மட்டுமே பார்த்ததென்றோம்
மண்ணை மீட்கப்
பதறிய நாங்கள்
மனங்களை மாத்திரம்
தொலைத்து வந்தோம்
அசுரனிடம் நியாயம்
கேட்டவரை எண்ணி
கடவுளும் நிரந்தரமாக
கண்மூடி இருந்தார்
பணத்திற்காக கோசம்
போட்டவர்களை இனத்திற்கான
தேச பிதாக்களாக
உருவகித்தோம்
பேசிய குரல்வளைகளை
அறுத்து எறிந்தோம்
மாற்றுக் கருத்தை
துரோகிகளாக்கி னோம்
பேசியது துரோகம்
இல்லை பேச்சை
நிறுத்தி வைத்தது
துரோகம் என்பது
புரியாது இருந்தோம்
மனிதர்களை ஓமகுண்டத்தில்
தள்ளிய அசுரர்களின் போராட்டம்
முடிந்தபோது கோவணமும்
இல்லாத எம்மினத்தின்
கண்ணீரில் வியாபாரம்
நடத்தும் நாடுகடந்த
தமிழர்கள் ஆகினோம்
நீங்கள் கண்ணீர்விடுவதாக
வியாபாரம் செய்கிறீர்கள்
எங்கள் கண்களில்
எப்போதும் இரத்தம்தான்
வருகிறது.
ஆயுதப் பேச்சால்...
மெளனித்த மனிதர்கள்
தொலைந்துபோன நீதிகள்
மறுக்கப்பட்ட உரிமைகள்
கொடுக்கப்பட்ட தண்டனைகள்
உலாவிவந்த நம்பிக்கைகள்
எகிறிவிழுந்த அதிகாரங்கள்
நெரிக்கப்பட்ட குரல்வளைகள்
உறைந்துபோன இரத்தங்கள்
அகழ்ந்தெடுத்த உரிமைகள்
மீட்டெடுத்த மண்
ஒளிந்துபோன வேறுபாடுகள்
நிமிர்த்திக்கொண்ட வீரம்
அது மெளனித்தபோது
ஊமைகளாய் உலாவிவந்த
நானும்நீயும் இரகசியம்பேசும்
உரிமையாவது கிடைத்தது
அந்த உரிமையில்
வந்த நம்பிக்கையில்
மாண்ட மனிதருக்காய்
மெளனிக்கிறேன் என்றும்...
தொலைந்துபோன நீதிகள்
மறுக்கப்பட்ட உரிமைகள்
கொடுக்கப்பட்ட தண்டனைகள்
உலாவிவந்த நம்பிக்கைகள்
எகிறிவிழுந்த அதிகாரங்கள்
நெரிக்கப்பட்ட குரல்வளைகள்
உறைந்துபோன இரத்தங்கள்
அகழ்ந்தெடுத்த உரிமைகள்
மீட்டெடுத்த மண்
ஒளிந்துபோன வேறுபாடுகள்
நிமிர்த்திக்கொண்ட வீரம்
அது மெளனித்தபோது
ஊமைகளாய் உலாவிவந்த
நானும்நீயும் இரகசியம்பேசும்
உரிமையாவது கிடைத்தது
அந்த உரிமையில்
வந்த நம்பிக்கையில்
மாண்ட மனிதருக்காய்
மெளனிக்கிறேன் என்றும்...
15 மே, 2010
நான்...
மனிதம் தொலைத்த நான்
மறுகருத்தே அற்ற நான்
புனிதம் தொலைத்த நான்
பிறதேசம் சென்ற நான்
கொலையில் மகிழ்ந்த நான்
இதயம் இழந்த நான்
அழிவில் மகிழ்ந்த நான்
அதனால் வாழ்ந்த நான்
உலகம் மறந்த நான்
உண்மை துறந்த நான்
பகையில் மகிழ்ந்த நான்
கனவில் மிதந்த நான்
யதார்த்தம் தொலைத்த நான்
ஈழத்தின் சாபமே நான்
இன்னும் மறுப்பேன் நான்
இருப்பை அழிப்பேன் நான்
அனுமானாய் வந்த நான்
அழிக்கவே தெரிந்த நான்
இரணத்தை இரசிப்பவன் நான்
உன்னிரத்தம் குடிப்பேன் நான்
மறுகருத்தே அற்ற நான்
புனிதம் தொலைத்த நான்
பிறதேசம் சென்ற நான்
கொலையில் மகிழ்ந்த நான்
இதயம் இழந்த நான்
அழிவில் மகிழ்ந்த நான்
அதனால் வாழ்ந்த நான்
உலகம் மறந்த நான்
உண்மை துறந்த நான்
பகையில் மகிழ்ந்த நான்
கனவில் மிதந்த நான்
யதார்த்தம் தொலைத்த நான்
ஈழத்தின் சாபமே நான்
இன்னும் மறுப்பேன் நான்
இருப்பை அழிப்பேன் நான்
அனுமானாய் வந்த நான்
அழிக்கவே தெரிந்த நான்
இரணத்தை இரசிப்பவன் நான்
உன்னிரத்தம் குடிப்பேன் நான்
6 மே, 2010
மன்னிப்பு...
சிங்களதேசமே
வென்றுவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்.
சிங்களதேசமே
தமிழரின் சுகந்திர
தாகத்தை கொன்றுவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்
ரோம சாம்பிராச்சியம்
வெற்றிகளைத்தான்
கண்டது
மனிதத்தில் மட்டும்
மரித்துப் போனது
பெளத்தம் தானம் கேட்டது
தமிழரின் இரத்தத்தை
எப்போது கேட்பதாகச்
சொன்னது சகோதரா?
நீங்கள் இறுமாந்து
இருக்கிறீர்கள்
உங்கள் வாரிசுகள்
வருங்காலத்தில்
தலைகுனிவார்கள்
கொடுப்பதில் மகிழ்வுற
முடியாத நீங்கள்
புத்தரை அழைத்துவந்து
கேளுங்கள் இரத்தம்தான்
அவனுக்குத் தானமாக வேண்டுமா
என்று?
மனிதம் பேசிய மகானின்
சீடர்கள் மனிதத்தைத்
தொலைத்த பின்பு
நடைப்பிணமாக
இலங்கையின்
மக்களாகி விட்டீர்கள்.
நீங்கள் பலயுகங்கள்
கழிந்தபின்பு தேடப்போவதை
நான் இன்று புரிந்து கொண்டேன்.
சகோதரா! நம்மினம் இழைத்த
பிழைகளை மன்னித்து விடுங்கள்
நீங்கள் அந்த மகானின்
வாரிசுகளாய் இருந்தால்.
வென்றுவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்.
சிங்களதேசமே
தமிழரின் சுகந்திர
தாகத்தை கொன்றுவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்
ரோம சாம்பிராச்சியம்
வெற்றிகளைத்தான்
கண்டது
மனிதத்தில் மட்டும்
மரித்துப் போனது
பெளத்தம் தானம் கேட்டது
தமிழரின் இரத்தத்தை
எப்போது கேட்பதாகச்
சொன்னது சகோதரா?
நீங்கள் இறுமாந்து
இருக்கிறீர்கள்
உங்கள் வாரிசுகள்
வருங்காலத்தில்
தலைகுனிவார்கள்
கொடுப்பதில் மகிழ்வுற
முடியாத நீங்கள்
புத்தரை அழைத்துவந்து
கேளுங்கள் இரத்தம்தான்
அவனுக்குத் தானமாக வேண்டுமா
என்று?
மனிதம் பேசிய மகானின்
சீடர்கள் மனிதத்தைத்
தொலைத்த பின்பு
நடைப்பிணமாக
இலங்கையின்
மக்களாகி விட்டீர்கள்.
நீங்கள் பலயுகங்கள்
கழிந்தபின்பு தேடப்போவதை
நான் இன்று புரிந்து கொண்டேன்.
சகோதரா! நம்மினம் இழைத்த
பிழைகளை மன்னித்து விடுங்கள்
நீங்கள் அந்த மகானின்
வாரிசுகளாய் இருந்தால்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
