23 மே, 2010

ஆயுதப் பேச்சால்...

மெளனித்த மனிதர்கள்
தொலைந்துபோன நீதிகள்
மறுக்கப்பட்ட உரிமைகள்
கொடுக்கப்பட்ட தண்டனைகள்

உலாவிவந்த நம்பிக்கைகள்
எகிறிவிழுந்த அதிகாரங்கள்
நெரிக்கப்பட்ட குரல்வளைகள்
உறைந்துபோன இரத்தங்கள்

அகழ்ந்தெடுத்த உரிமைகள்
மீட்டெடுத்த மண்
ஒளிந்துபோன வேறுபாடுகள்
நிமிர்த்திக்கொண்ட வீரம்

அது மெளனித்தபோது
ஊமைகளாய் உலாவிவந்த
நானும்நீயும் இரகசியம்பேசும்
உரிமையாவது கிடைத்தது

அந்த உரிமையில்
வந்த நம்பிக்கையில்
மாண்ட மனிதருக்காய்
மெளனிக்கிறேன் என்றும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக