மனிதம் தொலைத்த நான்
மறுகருத்தே அற்ற நான்
புனிதம் தொலைத்த நான்
பிறதேசம் சென்ற நான்
கொலையில் மகிழ்ந்த நான்
இதயம் இழந்த நான்
அழிவில் மகிழ்ந்த நான்
அதனால் வாழ்ந்த நான்
உலகம் மறந்த நான்
உண்மை துறந்த நான்
பகையில் மகிழ்ந்த நான்
கனவில் மிதந்த நான்
யதார்த்தம் தொலைத்த நான்
ஈழத்தின் சாபமே நான்
இன்னும் மறுப்பேன் நான்
இருப்பை அழிப்பேன் நான்
அனுமானாய் வந்த நான்
அழிக்கவே தெரிந்த நான்
இரணத்தை இரசிப்பவன் நான்
உன்னிரத்தம் குடிப்பேன் நான்
15 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக